சுழல்நிலை
மாலை. “ரகு....” – ராஜ் அவசரமாக. டிங் டிங்... டிங் டிங்... டிங் டிங்... “டேய் ரகு கதவ தொறடா... ரகு...” டிங் டிங்... டிங் டிங்... “வரேன் வரேன். வந்துட்டேன் டா. குளிச்சிட்டு இருந்தேன்.” – ரகு ரகு கதவை திறக்க. “எப்படா வந்த ஊர்ல இருந்து?” – ராஜ் அமைதியாக “ராஜ், நீ நேத்து போட்டிருந்த சட்டையிலேயே வந்துருக்க ராஜ்.” – ரகு கவலையாக “டேய், நான் என்ன கேக்குறேன், நீ என்ன உளற?” “உனக்கு புரியாது. உள்ள வா.” -------------------------------------------------------------------------------------------------------------------------- இரவு. “இதுல இருந்து எப்படி வெளியபோறதுனு தெரியல. என் நிலமைய இங்க யாருக்கும் சொல்லி புரிய வைக்கமுடியல. நாளைக்கு நான் கண் முழிக்கும்போது, இதெல்லாம் மாறிபோயிட்டா எவ்வளவு நல்லா இருக்கும். தினமும் இப்படி பொலம்பிட்டே இருக்கவேண்டியது தானா? ஊருக்கே போயிடலாம், ஆனா வேலை கிடைச்சும் எப்படி ஊருக்கு போறது? வேலை கிடைச்சிருச்சுனு சொல்லிக்ககூட முடியல. நல்ல சம்பளம் தான், இருந்து மட்டும் என்ன ப்ரோச்சனம்? நான் சரியா கணக்கு வைக்கல, இது எத்தனாவது நாளுன்னு.